மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் மார்ச் 12 அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, வருடாந்த இரதோற்சவத்திற்கான கொடியேற்றம் பெப்ரவரி 18 அன்று நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தொடங்கி காலை மாலை என இரு வேளைகளிலும் விசேட பூஜைகள் நடைபெறும்.
தேரின் வீதி உலா மார்ச் 12 அன்று நடைபெறும். நீர்வெட்டு மார்ச் 14 அன்று மற்றும் மலர் ஊஞ்சல் மார்ச் 15 அன்றும் நடைபெறும்.