செய்திகள் விளையாட்டு

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் இலங்கை இராணுவ தடகள வீரர் பாலித பண்டாரவிற்கு தங்கப் பதக்கம்
இலங்கை இராணுவ தடகள வீரரான பணிநிலை சார்ஜன் எச்.ஜி. பாலித பண்டார அவர்கள் 2025 பெப்ரவரி 11 அன்று துபாயில் நடைபெற்ற உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் குண்டு எறிதல் (எப்42) போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அவரது சிறந்த செயல்திறன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், இது இலங்கையின் பரா-தடகள வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

சர்வதேச அளவில் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு, அவர் சிறந்த திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தி போட்டியாளர்களை விஞ்சும் வகையில் குண்டு எறிதந்தார். அவரது வெற்றி, அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை மட்டுமல்லாமல், இலங்கை பரா-தடகளத்தின் வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த தங்கப் பதக்க வெற்றி சர்வதேச பரா-விளையாட்டுகளில் இலங்கையின் இருப்பை உறுதிப்படுத்துவதுடன், வரவிருக்கும் போட்டிகளில் மேலும் வெற்றி பெறுவதற்கான களத்தை அமைக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன