உள்ளூர் செய்திகள் செய்திகள்

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு நாளை (16) கண்டியில் 

சிங்கள தமிழ் புது வருட கொண்டாட்டங்களை முன்னிட்டு இடம்பெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச நிகழ்வு நாளை (16) கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெறவுள்ளது. நாளை காலை முற்பகல் 9.04 மணியளவில் சுப நேரத்தில் கண்டி தலதா மாளிகை வளாகத்தில்  நாத தேவாலய பூமியில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும், இவ்வரச நிகழ்வு நடைபெறும். 

மகா விகாரையின் விகாராதிபதி ஷ்யாமோபாலி மகா நிகாயவின் மல்வத்து மற்றும் அஸ்கிரி உகய பிரிவின் மகாநாயக்க சுவாமியின் அனுஷ்டானங்களைத் தொடர்ந்து இந்நிகழ்வின் செயற்பாடுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.  தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச விழா சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்விற்கு சுகாதார மற்றும் ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன