உள்ளூர் செய்திகள் கட்டுரை செய்திகள்

அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரம் குறித்த நிலையான குழு பிரதமரின் தலைமையில் கூடியது

இந்நாட்டில் உள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களின் தரநிலைகள், தர உறுதி மற்றும் அங்கீகாரம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிலையான குழு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் நேற்று (15) கூடியது.

அரசு சார்பற்ற உயர்கல்வி நிறுவங்களின் கல்வித் தரத்தை உரிய மட்டத்தில் பராமரிக்கவும், அந்த உயர்கல்வி நிறுவனங்களை ஏனைய அரச உயர்கல்வி நிறுவனங்களின் நிலைக்கு நேர்மறையான முறையில் கொண்டு வரவும் தேவையான கொள்கை முடிவுகள் குறித்த முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு குழு உறுப்பினர்களிடம் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாகக் கூடிய இந்தக் குழுவின் தலைவராக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவாவும் பங்கேற்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன