உள்ளூர் செய்திகள் செய்திகள்

கிரிப்டோ நாணயங்கள் குறித்து போலி விளம்பரங்கள் – பொது மக்களுக்கு பிரமர் அலுவலம் அவசர எச்சரிக்கை

முகப்புத்தகம் (Facebook), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் மோசடி ‘கிரிப்டோ’ நாணய வணிகங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் இந்த மோசடி விளம்பரங்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த நாட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின் பிற முக்கிய பிரமுகர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த மோசடி விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கம், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதும், பிரபலங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நல்லெண்ணத்தை சேதப்படுத்துவதன் மூலம் அவர்கள் மீதான நம்பிக்கையை அழிப்பதும் ஆகும்.

லிதுவேனியாவிலிருந்து இயங்கும் இந்த மோசடி கணக்குகளால் மேற்கொள்ளப்படும் மோசடி விளம்பரங்கள், இந்த நாட்டில் உள்ள பேஸ்புக் பயனர்களை தீவிரமாக குறிவைத்து வருவதாகவும் பிரதமர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனவே, அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்டதாக பொய்யாகக் கூறும் கிரிப்டோ நாணய முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒன்லைன் விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன