உள்ளூர் செய்திகள் செய்திகள்

கம்பஹா மாவட்ட அரச நிறுவன வளாகங்களில் 1000 தென்னங்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டுள்ளது

கம்பஹா மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள் உட்பட அரச நிறுவன வளாகங்களிலும் 1000 தென்னங்கன்றுகளை நடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் அதிகபட்ச நில பயன்பாட்டை உறுதி செய்வதற்கும், எதிர்காலத் தேங்காய் நுகர்வை பூர்த்தி செய்வதற்கு பங்களிப்பு செய்வதற்கும், கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே விடுத்த கோரிக்கைக்கு இணங்க, தென்னை அபிவிருத்திச் சபை, முதல் கட்டத்தின் கீழ் 750 தென்னங்கன்றுகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாவட்டச் செயலக வளாகத்தில் 100 தென்னங்கன்றுகளும், மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் பிற அரச நிறுவன வளாகங்களில் உள்ள இடவசதிக்கு ஏற்ப மீதமுள்ள 650 தென்னங்கன்றுகளும் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்படும் அனைத்துக் கன்றுகளையும் பாதுகாத்துப் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் அனைத்துக் கன்றுகளையும் நடும் பணியை முடிக்க வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கம்பஹா மாவட்ட ஊடகப் பிரிவு

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன