உள்ளூர் செய்திகள் செய்திகள்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, 05 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது.

ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தில் 27,500 மெற்றிக் தொன் உரத்தை பயன்படுத்தி 56,000 மெற்றிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த கலப்பு உரத்தை 4,000 ரூபா மானிய விலையில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

50 கிலோகிராம் கலப்பு உர மூடையொன்றின் தற்போதைய சந்தை விலை 9,500 ரூபாவாகும்.

நாடளாவிய ரீதியில் தெங்குச் செய்கையாளர்களுக்காக மானிய விலையில் விநியோகிக்கப்படவுள்ள கலப்பு உரத்தை இம்மாத இறுதியில் வழங்க திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன