உள்ளூர் செய்திகள் செய்திகள்

நாடாளுமன்றத்தில் ரணிலை விமர்சித்த பிமல் ரத்நாயக்க

பெராரி ரக வாகனத்தை ஓட்டுபவர் அல் ஜசீராவில் மோதி நசுங்கிவிட்டதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பெரராரி ரக வாகனத்தை ஓட்டுபவருக்கு போலியான அனுமதிப்பத்திரம் ஒன்றே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த பிமல் ரத்நாயக்க,

“ உண்மையிலேயே, சபாநாயகர் அவர்களே, இன்றைய விவாதத்தை நாம் ஒரு சோகமான செய்தியுடன் ஆரம்பிக்க வேண்டும்.

அண்மையில் இடம்பெற்ற ஒரு பயங்கரமான வாகன விபத்து தொடர்பிலான அறிவித்தல் தான் அது.

பெரராரி ரக வாகன அனுமதிப்பத்திரம் இருப்பதாக கூறியவர் அல்ஜசீராவில் மோதி நசுங்கி விட்டார்.

அவருடைய மூளைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்காரணமாக, இப்போதெல்லாம் அவர் கண்டவற்றை உலறி வருகிறார்.” எனத் தெரிவித்தார்.

அண்மையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது மீண்டும் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்க வாய்ப்புகள் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பெராரி ரக வாகனத்தின் அனுமதிப் பத்திரம் உடையவர், எல்போர்ட் உள்ளவர்களுடன் பயணிக்க விரும்புவதில்லை” என அரசாங்கத்தை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் (06) அவர் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன