உள்ளூர் செய்திகள் செய்திகள்

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரதப் பாதை நிருமாணத்திற்கு அரசாங்கத்தின் உடனடி அவதானம்

அவிசாவளையிலிருந்து கஹவத்தை வரையான புகையிரத பாதையை நிருமாணிப்பதற்கு புதிய அரசாங்கத்தின் உடனடி அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் பிரதி பிரதான பொறியியலாளர் (பாதை) பி.ஜே. பிரேமதிலக தெரிவித்தார்.

நேற்று (13) இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த புகையிரதப் பாதையில் முதலாவது கட்டமாக அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி வரை, இரண்டாம் கட்டமாக இரத்தினபுரியிலிருந்து கஹவத்தை வரையும், மூன்றாம் கட்டமாக எம்பிலிபிட்டிய, சூரியவெவ, மத்தளை ஊடாக ஹம்மாந்தோட்டை துறைமுகம் வரையும் நிருமாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

1970கள் வரை கொழும்பில் இருந்து கஹவத்தை வரையான புகையிரத சேவை இயங்கியமை குறிப்பிடத்தக்கது.

Previous article: மின்வெட்டு நிறுத்தம்Prev

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன