உள்ளூர் செய்திகள் செய்திகள்

clean sri lanka திட்டத்திற்கு ஜப்பானிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி

சுத்தமான மற்றும் ஆரோக்கியமான சூழலைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கத்தின் தாராளமான உதவி பெரிதும் பங்களித்துள்ளது.

இதன் கீழ், ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டம் கழிவுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் 28 அதிநவீன கம்பெக்டர் வாகனங்களை வாங்குவதற்கு 300 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இந்த மானியம் கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றலுக்கான முயற்சிகளை கணிசமாக மேம்படுத்துவதோடு, நிலையான நடைமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய அளவிலான உறுதிப்பாட்டை உறுதி செய்யும், அரசாங்கத்தின் Clean Srilanka திட்டத்தின் இலட்சியத்திற்கு ஏற்ப, நாட்டின் பௌதீக சூழலை தூய்மையானதாக மாற்றும்.

இந்த நிதி உதவியை வழங்கியதற்காக ஜப்பான் அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்த ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்துவதோடு, இலங்கையின் தூய்மையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன