உலகம் செய்திகள்

கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக பட்ச மழையாக 123.5 மில்லி மீற்றர் பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 123.5 மில்லி மீற்றர் வாகனேரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2″அடி நீர்மட்டம் அதிகரித்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

உருகாமம் பகுதியில் 101.1 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 ” அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது,

இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 84.0மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33 ஒருஅடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தும்பங்கேணியில் 62.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் நவகிரி பிரதேசத்தில் 62.3 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளது, மட்டக்களப்பில் 65.2மில்லி மீற்றர் மழையும், கிரான் பகுதியில் 68 மில்லி மீற்றரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறைந்த மழை வீழ்ச்சியாக கட்டுமுறிவுக்குளத்தில் 18 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர் செய்திகள் செய்திகள்

டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதிகளவான டெங்கு நோயாளர்கள்
உலகம் செய்திகள்

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன