ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை- நீர்கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடு

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்தலுக்கான வாய்ப்பு அறவே இல்லை- நீர்கொழும்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடு

0Shares

கடல் மார்க்க, சட்டவிரோத புலம் பெயர்தலைத் தடுக்கும் அவுஸ்த்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கை தலைவர் மேஜர் ஜெனரால் கிரைக் புரூணி இன்று நீர்கொழும்பு பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொண்டு நீர்கொழும்பு மீனவர் துறைமுகத்தில் விசேட ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இந்தநிகழ்வில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் இலங்கை கடல் எல்லை கடற்படை பொறுப்பதிகாரி றேர் எட்மிரால் NPS அட்டிகள்ளே (Rear Admiral NPS  Attygalle) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

படகு மூலம் சட்டவிரோதமாகப் புலம் பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின்விளைவுகள் பற்றி எச்சரிக்கை செய்வதற்கான முயற்சிகளில் இலங்கையர்கள் அனைவரும் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

2013 ஆம் ஆண்டில், செயற்பாட்டு இறைமை நாட்டு எல்லைகள் நிர்மாணித்ததிலிருந்து அவுஸ்திரேலியா, இலங்கையுடன் இணைந்து பணியாற்றி 12 ஆட்கடத்தல் படகிலிருந்து 204 பேரை திருப்பி அனுப்பிவைத்துள்ளது. எந்த ஒருவரும் அவுஸ்திரலியாவுக்கான படகு பயணத்தில் வெற்றி பெறவில்லை என, அவுஸ்திரேலியாவின் செயற்பாட்டு இறைமை நாட்டு எல்லைக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரால் கிரைக் புரூணி தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா ஒரு வலுவான மற்றும் பயனுள்ள உறவைப்பேணி வருகிறது. நாம் ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கும், ஆட்கடத்தல்காரர்கள் இலக்கு வைக்கும் பாதிக்கக்கூடிய நபர்களுக்கும் விழிப்பூட்டுவதற்கும் மற்றும் கடலில் மக்கள் இறப்பது போன்ற செயல்களை தடுத்து நிறுத்துவதற்கும் ஒன்றிணைத்து பணிபுரிகின்றோம் என் மேஜர் ஜெனரல் புரூண்டி குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அதிகார்களினால் ஆட்கடத்தல் படகு ஒன்று கைப்பற்றப்பட்ட பின் கடந்தமாதம் 13 சட்டவிரோத குடியேற்றவாசிகள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். அதிலிருந்த 13 ஆண்களும் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் அவர்கள் தொடர்பாக இலங்கையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 2019 மே மாதத்தில் மேலும் இரண்டு படகுகளில் கைதுசெய்யப்பட்ட 25 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடவுள்ளனர்.

” அவுஸ்திரேலியாவின் தீவிரமான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளின்படி, சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவு பயணம் செய்பவர்கள், அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்க்கோ அல்லது தொழில் புரிவதற்க்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு சட்டவிரோத பயணத்துக்கு முயற்சிப்பதன் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு சட்டரீதியாக புலம் பெயர்வதற்கு அவர்களுக்கு உள்ள ஏதேனும் வாய்ப்பை சுயமாகவே இழந்து விடுகின்றனர்.

அவுஸ்ரேலிய அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாத்தியமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆட்கடத்தல் வியாபாரத்தில் இணைந்துகொள்வதை தடுக்க சட்டவிரோத கொடியேற்றவாசிகளுக்கு 1% கூட வாய்ப்பு இல்லை என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்தது அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கபமாக பயணம் செய்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றியும் அவுஸ்திரேலியாவின் வலுவான கொள்கை பற்றியும் இதன் மூலம் தெளிவு படுத்தப்படுகின்றது இந்த வெற்றிகரமான பிரச்சாரம் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிக்கைகள், டிஜிட்டல் விளம்பரம்கள் வாயிலாக இலங்கை முழுவதும் கொண்டுசெல்லப்பட்டது.

இந்த பிரச்சாரத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையில் திரைப்பட கண்காட்சி ஒன்றை நடத்துவதற்க்கான வாய்ப்புள்ளது. இலங்கையின் திரைப்பட இயக்குனர்கள் சட்டவிரோத கடல் மார்க்க புலம் பெயர் முயற்சிக்கான ஆபத்துக்கள் பின்விளைவுகள் பற்றி குறுந்திரைப்படங்கள் சமர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என மேஜர் ஜெனரல் புரூணி தெரிவித்தார். தற்போதய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலைமைகள் திரைப்பட இயக்குனர்களின் இந்த பிரச்சார முயற்சிகள் மூலம் முற்றுப்பெறலாம் எனவும் அவர் நம்பிகை தெரிவித்தார்.

”சட்டவிரோத கடல் மார்க்க பயணம் பெறுமதியற்றது அவர்கள் அவ்வாறு பயணம் செய்பவர்கள் அவர்களது வாழ்க்கையை ஆபத்துக்கு உட்படுத்துகின்றனர் அல்லது அதிலுள்ள நீதி பொறுப்புக்கள் போன்ற விடயங்கள் பற்றி இலங்கை முழுவதும் மக்கள் விளங்கிக்கொள்வதற்கான எமது முயற்ச்களை நாம் நிறுத்தப்போவதியிலை. இந்த செய்தியை இலங்கை ஊடகங்கள் நாடுமுழுவதும் எடுத்து செல்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.

சட்டவிரோத படகு மூலமான பயணம் ஆபத்தானது ஆகையால் அது அர்த்தமற்றதாகும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலிவாவுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு பூச்சயமாகும் எனவும் மேஜர் ஜெனரல் புரூணி குறிப்பிட்டார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments