ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பில் டெங்குநோயினால் பாதிக்கப்பட்ட மேலுமொரு இளைஞர் மரணமடைந்துள்ளார்.

நீர்கொழும்பில் டெங்குநோயினால் பாதிக்கப்பட்ட மேலுமொரு இளைஞர் மரணமடைந்துள்ளார்.

0Shares

நீர்கொழும்பு தழுபத்தை பிரதேசத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு தழுபத்தை பிரதேசத்தில் சிறைச்சாலை வீதியில் (சுத்தவெள்ள வீதி) வசித்த 27வயதான கொடகெதர ஆராச்சிகே நுவான் சமீரா எனும் இளைஞரே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நீர்கொழும்பு நவலோகா தனியார் மருத்துவமனையில் ஆய்வு கூடத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 21ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவர் ஒருவரிடம் மருத்துவம் பெற்று வந்துள்ளார். பின் கடந்த 24ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார்.

இவ் இளைஞரின் மரணம் தொடர்பான நீதி மரண விசாரணைகள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் அவசரநிலை மரண பரிசோதகர் வைத்தியர் வி.கே. விஜயவர்தன அவர்களால் நடத்தப்பட்டது டெங்கு ரத்தக்கசிவு காரணமாக இவ் இறப்பு நிகழ்ந்துள்ளதாக மரண பரிசோதனை அறிக்கையில் பதிவாகியுள்ளன.

மருத்துவ பரிசோதனை அறிக்கையின் ஆதாரங்களுக்கு அமைய டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ரத்தகசிவு ஏற்பட்டமையே மரணத்துக்கு காரணம் என்று நீர்கொழும்பு நகர அவசரநிலை மரண பரிசோதகர் வைத்தியர் சிரிஜயந்த விக்ரமரத்ன உறுதி செய்துள்ளார்.

இவ் இளைஞரின் மரணத்துடன் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் டெங்கு நோயினால் இந்த மாதத்தில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments