கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்ததை தொடர்ந்து பட்டப்படிப்பை தொடரும் மாணவர்களுக்கான சாதாரண செலவுகள் உட்பட 10 இலட்சம ்ரூபாய் கடன் வசதியை பெற்றுக்கொடுக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்ய பயன்படுத்தப்படும் வெட்டுப்புள்ளியின் காரணமாக அரசாங்க பல்கலைகழகங்களில் இணைந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும் அரசுசாராத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளது.
இதன் கீழ் ஆகக்கூடிய கடன் தொகையாக 800,000 ரூபா வழங்கப்படவுள்ளது.
வட்டியற்ற கடன்வசதி திட்டமொன்று 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுயிருந்தது.
அரசாங்கம் இதனை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதற்கமைவாக அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்கு பொதுவான செலவுகளின் அடிப்படையில் 1.1 மில்லியன் ரூபா வரையில் கடன் தொகையை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏனைய கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கும் ஏனைய செலவுகளுக்காக வருடத்திற்கு 75,000 ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.