ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுநீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா

0Shares

நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் ஒளி விழா இன்று புதன்கிழமை (6-12-2017) பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அருட் சகோதரி எமலின் பிரதம அதிதியாகவும், அருட் சகோதரிகளான ஆன்மேரி, ஜுட், கிறிஸ்டா ஆகியோர் சிறப்பதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆசிரியை எஸ். துண்யா டயனித்தா வரவேற்புரை நிகழ்த்தினார். பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையுரை நிகழ்த்தினார்.

மாணவர்கள் பங்குபற்றிய வரவேற்பு நடனம் மற்றும் மூன்று மொழிகளிலும் கரோல் கீதம் என்பன நிகழ்வில் இடம்பெற்றன.

ஒளி விழாவுக்காக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகள் மற்றும் அதிபர் பரிசில்களை வழங்கினர். ஆசிரியை பெர்னாந்துபுள்ளே நன்றியுரை நிகழ்த்தினார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments