ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ரயில் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளனர்.
எனினும் குறித்த விவகாரம் தொடர்பில் இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்காதவிடத்து நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ரயில் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் உள்ள சிக்கல் குறித்து ஏற்கனவே சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எனினும் அப்பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதனாலேயே பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.