கடந்த மாதம் 10ம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நீர்கொழும்பில் போட்டியிட்டு , மற்றும் விகிதாசார முறையில் நீர் கொழும்பு மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகள் நேற்றும் இன்றும் இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வுகள் நேற்றையதினம் பெறடைஸ் பீச் ஓட்டலில் சுற்றுலாதுறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இன் நிகழ்வில் தமிழ் பேசும் இரண்டு உறுப்பினர்கள் (சஜித் மோகன், முகமட் நஸ்மியார்) சத்திய பிரமாணம் செய்துகொண்டார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் 6 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதிலும் ஆதில் 4 உறுப்பினர்கள் மாத்திரம் மேல் மாகாண சபை உறுப்பினர் சக்காவுல்லா சலீம் அவர்களின் காரியாலயத்தில் இன்று மேல் மாகாண சபை உறுப்பினர் சக்காவுல்லா சலீம் அவர்களின் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்கள். இதில் தமிழ் பேசும் மூன்று உறுப்பினர்கள் (M.A.S.பரீஸ்,M.N.நஸ்மிரோஸ்,K.கவிசா காயத்திரி) சத்திய பிரமாணம் செய்துகொண்டார்கள்.
பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் கொழும்பில் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்கள்.
நீர் கொழும்பு மாநகரசபையின் மாநகர முதல்வரை தேர்வு செய்யும் நிகழ்வு நாளை காலை நீர்கொழும்பு மாநகரசபையில் இடம்பெற உள்ளது.