அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘கம்பெரலிய’ என்ற கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நீர்கொழும்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் நீர்கொழும்பு கடற்கரை வீதி, குட்டி தூவ ஆகிய பிரதேசங்களில் வீட்டுக்கூரைகள் சேதமடைந்த 40 குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக 15 குடும்பங்களுக்கு நேற்றைய தினம்(19) நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சஜித் மோகன் அவர்களால் அதற்கான காசோலைகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.