அரசாங்கத்தின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தய கல்லூரியின் புதிய நான்கு மாடி கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழா எதிர்வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதி காலை 10 மணிக்கு பாடசாலை அதிபர் நா. புவனேஸ்வரராஜா அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இன் நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சஜித் மோகன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாடசாலையின் முக்கிய தேவையாக உள்ள இக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர் உட்பட பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், ஆசிரியர்கள் , பழைய மாணவர் மன்றத்தினர் அழைப்புவிடுத்துள்ளார்கள்.