ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்பிறந்தநாள் தினத்தன்று நண்பர்களுக்கு போதைப்பொருள் விருந்தளித்த இளைஞர் உட்பட 13 பேர் நீர்கொழும்பு தழுபத்தை...

பிறந்தநாள் தினத்தன்று நண்பர்களுக்கு போதைப்பொருள் விருந்தளித்த இளைஞர் உட்பட 13 பேர் நீர்கொழும்பு தழுபத்தை பகுதியில் கைது.

0Shares

அசீஸ், ஐஸ் போதைப்பொருட்களுடன் பிறந்தநாள் விருந்தளித்த சுற்றுலாத்துறை ஓட்டலில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் உட்பட 13 பேரை இன்று அதிகாலை(01) நீர்கொழும்பு தழுபத்தை (மந்த்ரி வத்த) பகுதியில் வைத்து கொச்சிக்கடை பொலிஸார் கைது செய்து ஒரு தொகை போதைப்பொருட்களையும் கைப்பற்றி உள்ளனர்.

நீர்கொழும்பு தழுபத்தை மந்திரி வத்த பிரதேசத்தில் வீடொன்றில் போதைப்பொருட்கள் பாவனையுடன் பிறந்த நாள் விழா கொண்டாடட்டம் ஒன்று இடம்பெற்று வருவதக நீர்கொழும்பு பொலிஸ் அதிகாரி கபில கடுபிடிய அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளபட்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிறந்தநாள் கொண்டாத்திற்க்காக பெருந்தொகையான போதைப்பொருள் பயன்படுத்த பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த போதைப்பொருள் வர்த்தகர் என சந்தேகப்படும் நீர்கொழும்பு பெரியமுள்ள ரகுமான பாத் பிரதேசத்தை ஒருவரும் இவ் விருந்தில் கலந்துகொண்டிருந்த பொது கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து போதைப்பொருள் விற்பனை செய்த 66,000 ரூபாய் பணமும் கைப்பற்ற பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இச் சுற்றிவளைப்பின் போது இவர்களிடம் இருந்து அஷிஸ் போதைப்பொருள் 650 கிராம்மும் ஐஸ் போதைப்பொருள் 7.70 கிராம்மும் கைப்பற்ற பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் நாளையதினம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments