நீர்கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களும் அதிகாரிகளும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் அலுவலகத்தில் 25 தபால் ஊழியர்கள் கடமையில் இருக்க வேண்டும் ஆனால் தற்போது அங்கு 12 ஊழியர்கள் மட்டுமே கடமையில் உள்ளனர். எனவே ஒரே ஊழியர் பல வேலைகள் செய்ய வேண்டிஉள்ளதனால் அங்கு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
ஒரு அதிகாரி பல வேளைகளில் ஈடுபடுவதன் காரணமாக தபால் நிலையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
தபால் நிலையத்தில் காணப்படும் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக இங்கு வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகர்யத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக நீர்கொழும்பு பிரதான தபால் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவித்தல் ஒன்றும் அங்கு காட்சிப்படுத்த பட்டுள்ளது.
குறித்த அறிவித்தல் சிங்கள மொழியில் மட்டும் காட்சி படுத்தப்பட்டுள்ளமை காரணமாக தமிழ் மொழி மட்டும் தெரிந்தவர்கள் மேலும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
நீர்கொழும்பு தபால் நிலையத்தில் காணப்படும் இவ் குறைபாடுகள் தொடர்பாக தபால் தொலைத்தொடர்பு அமைச்சும், தேசிய அரச கரும மொழிகள் அமைச்சும் கவனம் செலுத்தி உரிய தீர்வை பொதுமக்களுக்கு பெற்றுத்தர வேண்டும்.