ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (11) இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா என்பது தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட உள்ளது.
பிரதமருக்கு எதுரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அந்தக் கட்சியின் உறுப்பனர்களுடன் இணைந்து பணியாற்று முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளதால் தற்போதைய அரசாங்கத்தில் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.
அத்துடன் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் புறக்கணித்திருந்தமை கூறத்தக்கது.