ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுதுப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு

துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நவோதய கிருஷ்ண உயிரிழப்பு

0Shares

இன்று (09) காலை 8.45 மணியளவில் புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது பழக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே மோட்டார் சைக்களில் வந்த ஆயுததாரியொருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

https://www.facebook.com/selvah1/videos/2542789315746686/

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments