ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஇந்து மத விவகாரங்களிலிருந்து மஸ்தான் நீக்கம்

இந்து மத விவகாரங்களிலிருந்து மஸ்தான் நீக்கம்

0Shares

காதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

அண்மையில் தேசிய அரசாங்கத்தில் இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஐந்து பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் சுவாமிநாதன் வகிக்கும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் முஸ்லிம் பாராளுமான்ற உறுப்பினர் ஒருவர் இந்து மத விவகாரங்களுக்கு பொறுப்பாக பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதை கண்டித்து அரசியல் தரப்பிலும் பொது அமைப்புகள் மற்றும் இந்து மத அமைப்புகள் கடும் அதிருப்தியினை வெளியிட்டிருந்தனர்.

கொழும்பில் சில இடங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த நியமனம் குறித்து அமைச்சரவை ஊடக சந்திப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

இதனால் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் டி.எம்.சுவாமிநாதன் இந்த பிரச்சினையினை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு தெரியப்படுத்தியுருந்தார்.

இந் நிலையிலேயே காதர் மஸ்தானை மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சராக மாத்திரம் நியமிக்கவும் இந்து மத விவகாரங்களிலிருந்து நீக்கவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments