இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை முற்றாகத் தடுக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் 3 மாதங்களாக நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளரான விசேட மருத்துவ நிபுணர் ஜயருவன் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்ய முடியாவிட்டால் ஊரடங்குச் சட்டத்தை இடைக்கிடையே நீக்காமல் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு நாடு முழுவதிலும் அமுல்செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள நிலைமையை பார்க்கின்றபோது எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக இரட்டிப்பாகலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்.