கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் கொரோனா தொற்றினால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,