சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி பருவி வருகிறது. இந்த நோயால் இந்தியாவில் 700-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயின் தாக்கம் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவினால் பாதித்த ஏழை மக்களுக்கு உதவும் விதமாக விளையாட்டு பிரபலங்கள் நிதியுதவி செய்து வரும் நிலையில், கொரோனா குறித்து வீடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு உதவ ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார்.
இதில் ரூ.25 லட்சத்தை மராட்டிய முதல்- மந்திரி நிவாரண நிதிக்கும், மற்றொரு ரூ.25 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் வழங்கி இருக்கிறார்.