ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுமேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

மேல் நீதிமன்ற உத்தரவின் படி பூஜித் மற்றும் ஹேமசிறி பிணையில் விடுதலை

0Shares

கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று (05) உத்தரவிட்டார்.

இந்த முறைப்பாடு இன்று நகர்த்தல் பத்திரம் மூலம் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இதன்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகள் நீதவானால் வாசிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான் இரகசிய பொலிஸார் அறிவிக்கும் போது அங்கு சென்று தேவையான வாக்குமூலத்தினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் குறித்த வழங்கு எதிர்வரும் மே மாதம் 6 திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments