நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட சில பிரதேசங்களில் நாளைய தினம்(06) திங்கட்கிழமை 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்புகலிய நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மின்பிறப்பாக்கி ஒன்று நிறுவப்படுவதால் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது,
இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை முற்பகல் 9 மணிமுதல் செவ்வாய்கிழமை 9 வரையான காலப்பகுதியிலேயே நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொச்சிக்கடை, தூவ, பிட்டிபன, துங்கரல்பிட்டிய, பாசியாவத்தை, பமுனுகம, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கட்டுநாயக்க விமானப்படைத் தளம், கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கந்தானை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.