ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை (30) கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நாளை காலை 11 மணிக்கு கலந்துதரையாடல் ஒன்றில் ஈடுபடுவதற்காக சிறிகொத்த கட்சி தலையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரிற்கு இடையிலும் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.