போலியான வீசா அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்தி, இங்கிலாந்து நோக்கி பயணிக்க முயற்சித்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிறுப்பு பிரதேசத்தினை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் நோக்கி பயணிக்க இருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானத்தில் பயணிக்க முயற்சித்துள்ள நிலையிலே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.